Thursday 26 November 2015

சிறுநீரகக் கற்களை மருந்தினால் கரைக்க முடியும்- kidney stones



siruneeraga karkal fi

சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை அறுவை சிகிச்சை செய்யாமல் சித்தா மருந்துகள் சாப்பிடுவதாலேயே கரைக்க முடியும். எனவே அறுவை சிகிச்சையும் தேவையில்லை அதிக பணமும் தேவையில்லை.
சிறுநீரகத்தில் உருவாகின்ற கற்களைப் பொறுத்தவரையில்(kidney stones) மருந்துகள் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்கிற முடிவுக்கு அலோபதி மருத்துவம் வந்துவிட்டது.
ஆனால் சிறுநீரகக் கற்களை சித்த மருத்துவத்தில் மிகச் சாதாரணமாக மருந்துகளால் கரைத்து விட முடியும் என்கிற நற்செய்திதான் இந்த கட்டுரை.
“Attempts to develop drugs that dissolve stones have so far been unsuccessful ” அதாவது, சிறுநீரகங்களில் உருவாகும் கற்களை கரைப்பதற்கான மருந்துகளை கண்டறியும் முயற்சிகள் வெற்றியடையவில்லை என்கிறது அலோபதி மருத்துவம். எனவே சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சையை (ESWL) பரிந்துரைக்கின்றனர் .
அலோபதி மருத்துவத்தின் மருந்தியல் வளர்ச்சி என்பது அபரிமிதமானது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டிருப்பது. அதன் வளர்ச்சியை கழுத்து வலிக்க அண்ணார்ந்து பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்படியிருக்க அதனால் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு மருந்து தயாரிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
சிறுநீரகக் கற்கள் எனும் பிரச்சினையை ‘கல்லடைப்பு நோய்’ என சித்த மருத்துவம் நோய் கணிப்பு செய்கிறது.

சிறுநீரகக் கற்கள் என்றால் என்ன ?

siruneeraga karkal2

சிறுநீரகங்கள் மற்றும் அவற்றிலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை கொண்டு செல்லும் சிறுநீர் குழாய்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் வரை உள்ள எந்த இடத்திலும் உருவாகும் கற்களை சிறுநீரகக் கற்கள் என்கிறோம். சிறிய மணல் அளவு கற்களில் இருந்து பல மில்லி மீட்டர் அளவு வரை உருவாகலாம்.

அவைகளுடைய பகுதிப்பொருள்களால் அவை பல வகைப்படுகின்றன.

•    80% சிறுநீரகக் கற்கள் கால்சியம் தாதுவினால் உருவாகின்றன. அவை கால்சியம் ஆக்சலேட்களாலும்(Calcium oxalate), கால்சியம் பாஸ்பேட்களாலும்(Calcium Phosphate) உருவாகின்றன.
•    15% கற்கள் மக்னீசியம் அம்மோனியம் பாஸ்பேட்களால்(Magnesium Phosphate, ammonium Phosphate) உண்டாகின்றன.
•    இவை தவிர சிஸ்டைன்(Cystine) மற்றும் யூரிக் அமிலத்தாலும்(Uric acid) கற்கள் உண்டாகின்றன.

சிறுநீரகக் கற்கள் ஏன் உண்டாகின்றன ?

இரண்டு காரணங்கள்.
1.    நாம் உண்ணும் உணவும் நீரும் காரணம்.
2.    பரம்பரையாக வரும் உயில் எழுதாத சொத்து.

யாருக்கெல்லாம் சிறுநீரகக் கற்கள் வரலாம்?

போதுமான அளவு நீர் குடிக்காமல் இருப்பவர்கள்.
புரதப்பொருள் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் அதிகம் சாப்பிடுவார்கள்.
“என்ன சமைக்கிற… உப்பே பத்தல….. இன்னும் கொஞ்சம் உப்பு போடு…” என்று பேசும் நாக்கு உள்ளவர்கள்.
திராட்சை பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு அதிகம் குடிப்பவர்கள்.
கால்சியம் மாத்திரைகளை அதிக வருடங்கள் எடுத்துக் கொள்பவர்கள்.
siruneeraga karkal6
சில நோய் நிலைகளில் உள்ளவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். உதாரணமாக இரத்தத்தில் கால்சியம் அளவை அதிகரிக்கக்கூடிய பாரா தைராய்டு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள்.
பரம்பரை சொத்தாக கற்களைப் பெறுபவர்கள்.
பெரும்பாலும் ஆண்களுக்கு இந்நோய் உண்டாகிறது.

கல்லடைப்பு நோயின் குறிகுணங்கள்:

siruneeraga karkal5

3 மில்லி மீட்டர் அளவு வரையிலான கற்கள் தானகவே சிறுநீர் கழிக்கும் போது வெளியே வந்துவிடும்.
அதற்குமேல் பெரியதான கற்கள் சிறுநீரகத்திலோ சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு செல்லும் குழாயிலோ, சிறுநீர்பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் துவாரம் வரையிலோ எங்கேனும் அடைத்துக்கொண்டு அல்லது சிக்கிக்கொண்டு வலியை ஏற்படுத்தும்.
தொப்புள், உள்தொடை, ஆண்குறி, பெண்குறி, அடி முதுகு, போன்ற பகுதிகளில் வலி ஏற்படும்.
வலியைத் தொடர்ந்து வாந்தி வரும் உணர்வு (ஓக்காளம்).
வாந்தி எடுத்தல்.
சுரம்.
சிறுநீரில் இரத்தம் வருதல்.
சிறுநீர் கழிக்கும்போது வலி எடுத்தல்.
போன்ற குறிகுணங்கள் காணப்படும்.
நோயை எவ்வாறு கண்டறிவது ?:
மேற்கூறியவாறு கற்கள் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையை நுண்கதிர் சோதனை (Scan) செய்து பார்த்துக்கொள்வது நல்லது. (பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை முழு வயிற்றுப்பகுதியையும் நுண்கதிர் சோதனை  (Ultra sound scan – KUB)செய்து பார்த்துக்கொள்வது நல்லது.)

சித்த மருத்துவம் வகைப்படுத்தும் கற்களின் வகைகள்:
வாத கல்லடைப்பு
பித்தகல்லடைப்பு
கப கல்லடைப்பு
வெண்ணீர் கல்லடைப்பு

என கல்லடைப்பு நோய் நான்கு வகைப்படுகிறது.
siruneeraga karkal3

வாத கல்லடைப்பு நோயில் கற்கள் முள் போன்று கருமையாக இருக்கும். இந்நோயில் சிறுநீர்ப்பையில் வலி இருக்கும்.
siruneeraga karkal1

பித்த கல்லடைப்பு நோயில் கற்கள் செம்மை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்நோயில் சிறுநீர்ப்பையில் கொதிப்பும் எரிச்சலும் இருக்கும்.
siruneeraga karkal4

கப கல்லடைப்பு நோயில் கற்கள் வெமையாக வழவழப்பான இருக்கும். சிறுநீர்ப்பை குளிர்ச்சியாக உணரப்படும். அந்த இடத்தில் ஊசியால் குத்துவது போல வலி இருக்கும் .
வெண்ணீர் கல்லடைப்பு ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனை. விந்துக்கள் தொடர்பாக வரும் பிரச்சனை இது.
நல்ல உடல் நிலையில் உள்ள இளம் வயது ஆண்களுக்கு ஏன் கற்கள் உண்டாகின்றன என தெரியவில்லை என அலோபதி மருத்துவம் சொல்வதற்கான பதில் இங்கே இருக்கிறது.

மருத்துவம் :

சித்த மருத்துவத்தில் சில சுண்ணங்கள், பற்பங்கள், மற்றும் சில புகைநீர்கள் போன்ற கற்களை கரைக்கக்கூடிய வலிமையான மருந்துகள் உள்ளன. இவற்றுடன் சில மூலிகைகளின் குடிநீரையும் எடுத்துக்கொள்வதன் மூலம் கற்களை கரைக்க முடியும்.
அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கக்கூடிய நோய்களில் சிறுநீரகக் கற்களும் ஒன்று.

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

உடல் பருமனும் நோய்களும் - Obesity



Dr.Jerome -FI

பழைய காலங்களில் பலிகொடுப்பதற்கென்றே ஆடு மாடு போன்றவைகளை வளர்ப்பார்கள். மிகவும் பரிவுடன் அதற்குத் தேவையான எல்லாத் தீவனங்களையும் கொடுத்து வளர்ப்பார்கள். அதை வேலைக்கும் பயன்படுத்தமாட்டார்கள் அதுவும் நன்கு ‘கொழு கொழு’ என்று வளரும். அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும் சிலர் இதேபோல் செய்கிறார்கள். ஆனால் விலங்குகளுக்கு பதிலாக அதேபோல பிள்ளைகளை வளர்க்கிறார்கள், பலி கொடுப்பதற்கு.
ஆம், உடல் பருமனால் அநேக நோய்கள் உண்டாகின்றன. ஆயுள்காலத்தை வெகுவாக குறைக்கும் காரணிகளில் உடல்

udal paruman4

பருமன் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
சிறுவயதில் குழந்தைகள் எப்படி வளர்க்கப்படுகிறார்களோ அப்படியே வாலிப வயதிலும் வளர்கிறார்கள், நடுத்தர வயதிலும் வாழ்கிறார்கள். கல்லூரிக்குச் சென்றாலும் நூலகத்தை விட உணவகத்திலேயே இவர்களை அடிக்கடி பார்க்க முடியும்.
உடல் பருமன் கிட்டத்தட்ட எல்லா நோய்களோடும் தொடர்புடையது.
udal paruman6இப்படிச் சொன்ன உடனேயே, உங்கள் மனதில் எழுகின்றவைகள். “டாக்டர், என் மகன்/மகள் எவ்வளவு எடை இருக்க வேண்டும்?” இப்போது இருக்கும் எடை சரிதானா, அதிகமா? என்பதுதான். இதற்கெல்லாம் பதில் இருக்கிறது. ஆனால் இவைகளுக்கு பதில் காண்பதற்கு முன்பாக, சில வாழ்வியல் புரிதல்கள் நமக்கு வேண்டும்.
இந்த புரிதல்களை அடிப்படையான அறிவு (Common Sense) என்றே நான் கூறுவேன்.
அதாவது உணவு என்பது உடலை வளர்ப்பதற்கல்ல, பசி எடுக்கும்போது தேவைக்கு சாப்பிடுவதற்கே. இந்த அடிப்படை உணர்வோடும் உடல் இயங்கியலோடும் இணைந்து வாழ்ந்தாலே போதும். எவ்வளவு எடை இருக்க வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும் என்ற கேள்விகள் வராது. உடல் எடையும் கூடாது.
இதை திருவள்ளுவரின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்,
“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து”
இதில் ‘பசி’ என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும்.
இது நாம் வாழும் சூழல், நாம் செய்யும் வேலைகள் இவைகளைப் பொறுத்து மாறுபடும்.
udal paruman3

சரி, இரண்டு பேர் இருக்கிறார்கள், ஒருவர் உங்கள் மகன் மற்றொருவர் பக்கத்து வீட்டு பையன், இருவருக்கும் ஒரே வயது. இருவரும் ஒரே எடை, ஒரே உயரம். கிட்டத்தட்ட இருவரும் ஒரே மாதிரியான வேலைகளைத்தான் காலை முதல் இரவு வரை செய்கிறார்கள். உங்கள் பக்கத்து வீட்டு பையன் ஆறு இட்லிகள் சாப்பிடுகிறான். உங்கள் பையனோ நான்கு இட்லிகள்தான் சாப்பிடுகிறான். “இருவரும் ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறார்கள் எனவே இவனும் ஆறு இட்லி சாப்பிடுவதுதானே சரி” என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படியல்ல இங்கு BMR- Basal Metabate Rate என்ற ஒன்றை உங்களுக்கு விளக்க வேண்டும். அதாவது அடிப்படை வளர்சிதை மாற்றம், இது என்னவென்றால் ஒருவர் எந்த வேலையும் செய்யாமல், ஓய்வாக இருக்கும் நேரத்தில் அவர் உடலில் எவ்வளவு ஆற்றல் (கலோரி) செலவாகிறது என்பதுதான். இது ஆளுக்கு ஆள் மாறுபடும்.
நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன், உடல் கூறுகள் எல்லோருக்கும் ஒன்றே தவிர, உடல் இயங்கியல் ஆளுக்கு ஆள் மாறுபடும்.
எனவே பசி என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். அந்த பசியின் அளவுக்கு உண்பதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. (சில நோய் நிலைகளில் ‘பசியின்மை’ ஏற்படும். அதற்கு சிகிச்சை எடுப்பது அவசியம்)
இந்த பசியின் அளவை ஒவ்வொருவரும் அறிவால் அறிந்தும், உணர்வால் உணர்ந்தும் சாப்பிடுவதே ஆரோக்கியம்.
இதனையும் திருவள்ளுரின் வார்த்தையில் கூறலாம்.
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்”
இந்த ‘தீ அளவு’ என்பதை ‘BMR’ உடன் ஒப்பிடுவது மிகவும் பொருந்தும்.

udal paruman5

சரி, உடல் பருமன் எப்படி ஏற்படுகிறது?
ஒரு நாளைக்கு நீங்கள் செலவளிக்கும் ஆற்றலுக்கு (இதனை கலோரி என்ற அளவீட்டில் குறிப்பிடுகிறோம்). அதிகமான கலோரி உள்ள உணவை தொடர்ந்து உண்டு வந்தால் உடல் பருமன் ஏற்படுகிறது.
ஒரு நாளைக்கு செலவாகும் கலோரிகளைவிட 50-200 கலோரி அதிகமாக உண்டு வந்தால், 4-10 ஆண்டுகளில் 2-20 க்கிலோ எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
udal paruman7

எனவே ஒரு நாளைக்கு நீங்கள் எவ்வளவு கலோரி செலவு செய்கிறீர்கள் என்பதும் எவ்வளவு கலோரி உண்கிறீர்கள் என்பதும் தான் உடல் பருமனை தீர்மானிக்கிறது.
இதனையும் திருவள்ளுவரின் வார்த்தைகளில் கூறலாம்.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”
அருந்தியது – உண்ட உணவு((Energy Consumed)
அற்றது – செலவழிந்த சக்தி (Energy Spent)
எனவே இந்த ஆற்றல் சமநிலைதான் உடல் சமநிலையைப் (Energy Balance) பராமரிக்கிறது.
ஆனால் இவற்றை எப்படி அளந்து கொண்டிருப்பீர்கள்? இதை ஒவ்வொரு நாளும் கணக்கிட்டு சாப்பிட முடியாது.
ஆனால் உடல் பருமனாக உள்ளதா என்பதை கணக்கிட முடியும்.
இதற்கு BMI – Body Mass Index, உடல் நிறை குறியீடு என்ற ஒரு கணக்கீடு உங்களுக்கு தெரிந்திருக்கும்.
BMI கணக்கிடும் முறை:
உங்கள் எடையை (கிலோ கிராமில்) உங்கள் உயரத்தின் (மீட்டரில்) வர்க்கத்தால் வகுத்து கிடைப்பதே BMI.
உதாரணமாக நீங்கள் 65 கிலோ எடையும் 165 செ.மீ உயரமும் இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.
udal paruman8
பொதுவாக அனைவருக்கும் BMI 18 முதல் 24 வரை இருப்பது சரியான அளவு.
உடல் பருமனுக்கு இன்னொரு அளவுகோலும் உள்ளது. உங்கள் வயிற்றின் சுற்றளவைக் கொண்டும் நீங்கள் உடல் பருமனோடு இருக்கிறீர்களா இல்லையா என கணிக்கலாம். ஒரு அளவு நாடா(Measuring Tape) எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வயிற்றின் சுற்றளவை அளந்து பாருங்கள்.
udal paruman1நீங்கள் ஆணாக இருந்தால் வயிற்றின் சுற்றளவு அதிகபட்சம் 102 cm இருக்கலாம்.
udal paruman2நீங்கள் பெண்ணாக இருந்தால் 88cm. இதற்கு மேல் இருந்தால் நீங்கள் உடல் பருமன் பிரச்சனையில் உள்ளீர்கள்.
25 முதல் 30 வரை இருந்தால் உடல் எடை அதிகமாக இருக்கிறீர்கள். 30க்கும் மேல் இருந்தால் நீங்கள் ‘உடல் பருமன்’ பிரச்சனையில் உள்ளீர்கள். தொடர்ந்து உடல் எடை அதிகரித்துக் கொண்டே வந்தால் உங்களுக்கு அனேக நோய் வரும் வாய்ப்பு உள்ளது.
இங்கு இன்னொரு விடயத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். உடல் கூறுகள்தான் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதே தவிர உடல் இயங்கியல் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. அடிப்படையில் வாத உடலினர், பித்த உடலினர், கப உடலினர் என மூன்று வகையாக அனைவரையும் பிரிக்கலாம்.
வாத உடலினர் இயல்பாகவே உயரமானவர்களாகவும், ஒல்லியாகவும் காணப்படுவர். பித்த உடலினர் நடுத்தரமாக காணப்படுவர். கப உடலினர் சற்று பெருத்த உடலமைப்புடன் காணப்படுவர்.
இந்த வேறுபாடுகள் அவரவர்களுக்கு இயல்பானதே. எனவே எந்த வகையான உடலினர் எந்த விகிதத்தில் மாறுபட்டு காணப்படுகின்றனர் என்பதை அவர்களின் தேகநிலையையும், நாடி நிலையையும் வைத்தே சரியாக கணிக்க முடியும். எனவே பொதுவாக கூற வேண்டுமானால்,
“அற்றல் அளவறிந்து உண்க அது உடம்பு
பெற்றான் நெடிதுய்க்குமாறு”
உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்:
udal paruman5

- இதய நோய்கள்

- பக்கவாதம்

- நீரிழிவு

- கல்லீரல் நோய்கள்

- உறக்கம் தொடர்பான நோய்

- நுரையீரல் நோய்கள்

- சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமை

- மூட்டு வலிகள்

- கால்களில் இரத்த நாளம் பாதிப்பு

- புற்று நோய் (மார்பக, கர்ப்பப்பை, பெருங்குடல் மற்றும் மலக்குடல்)

- சினைப்பை கட்டிகள்

- குழந்தை பேறின்மை

- மன சோர்வு

- சுய மரியாதை குறைவு

- பித்தப்பை கல்

- தோல் பிரச்சனைகள் (மார்பகங்களின் கீழ், தொடை இடுக்குகளில்)

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

Friday 6 November 2015

சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்




சர்க்கரை நோயாளிகள் என்ன சாப்பிடலாம் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்








CLINIC :

E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI
INDIA
MOBILE 9444317293

சர்க்கரை நோயாளிகளின் இதய பாதுகாப்பு

                   
                       சர்க்கரை நோயாளிகளின் இதய பாதுகாப்பு







CLINIC :
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI
INDIA
MOBILE 9444317293

இன்னொரு சர்க்கரை நோயாளியுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்


இன்னொரு சர்க்கரை நோயாளியுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்





CLINIC :
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI
INDIA
MOBILE 9444317293

சர்க்கரை நோயாளிகள் சுய மருத்துவம் செய்வது ஆபத்தானது



சர்க்கரை நோயாளிகள் சுய மருத்துவம் செய்வது ஆபத்தானது






CLINIC :
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI
INDIA
MOBILE 9444317293

சர்க்கரை நோயாளிகள் வாழ் நாள் முழுவதும் ஒரே மாதிரியான மருந்துகள்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா?



சர்க்கரை நோயாளிகள் வாழ் நாள் முழுவதும் ஒரே மாதிரியான  மருந்துகள்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமா?






CLINIC :
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI
INDIA
MOBILE 9444317293

இனிப்பு அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?





CLINIC :
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI
INDIA
MOBILE 9444317293

சர்க்கரை நோய் ஏன் வருகிறது?



சர்க்கரை நோய் ஏன் வருகிறது?





CLINIC : 
E.8, DOCTORS PLAZA
OPP TO SARAVANA SYORES
VELACHERY
CHENNAI
INDIA
MOBILE- 9444317293




Saturday 31 October 2015

எண்ணெய் தேய்த்து குளி - OIL BATH



Deepawalikku9


Deepawalikku1

எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உங்கள் வீட்டில் இல்லையா?, அப்படியானால் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியும். அந்த அளவுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு ஆரோக்கிய செயல்முறை.
எண்ணெய் தேய்த்து குளிப்பது என்றால் என்ன?
“இது எங்களுக்கு தெரியாதாக்கும்…… எண்ணெயை தேய்க்கனும் அப்புறம் குளிச்சிரனும்… அவ்வளவுதான்… இதென்ன பெரிய விடயமா? இதுக்கு ஒரு கட்டுரையா…. ?” … என முடித்துவிடும் விடயமல்ல இது. பல கோடி ரூபாய் செலவு செய்து பதினைந்து வருடம் ஆராய்ச்சி நடத்தலாம், அவ்வளவு விடயங்கள் உள்ளன.
எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
என்ன எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும்?
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
யார் யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னெல்லாம் செய்யக்கூடாது?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
என்னென்ன நோய் உள்ளவர்கள் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்க வேண்டும்? போன்ற நுணுக்கமான காரியங்களை சித்த மருத்துவம் மிகத் தெளிவாக விளக்குகிறது.
எத்தனை நாளுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்?
நதியா நடித்த பூவே பூச்சூடவா திரைப்படத்தில் “தீவளிக்கு தீவளி…. எண்ண தேச்சி நீ குளி… பாட்டி சொன்ன வைத்தியம்… கேட்டு வந்தேன் பைங்கிளி…” என ஒரு பாடல் வரும்.
நிச்சயமாக அந்த பாட்டி ஒரு மக்கு பாட்டியாகத்தான் இருக்கவேண்டும்.
நம் நாடு வெப்பமான பருவநிலை உடையது. இந்த வகை பருவநிலைக்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
Deepawalikku7

ஆனால் ஏதாவது பண்டிகை வந்தால்தான் எண்ணெய் தேய்த்து குளிக்கும் ஞாபகம் வரும். எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒன்றும் சடங்கல்ல. அது ஒரு ஆரோக்கிய செயல்முறை. என்றாவது ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது அனேக கலோரிகள் சக்தி வீணாகும். எனவே எண்ணெய் தேய்த்து குளித்த அன்று உடல் மிகவும் சோர்வடையும். பண்டிகை நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கவேண்டிய தேவையில் சோர்வுறுவது நல்லதா?
எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வரும் பலன்கள் :
-          உடல் சூடு குறையும் (நம் நாடு வெப்பமண்டல பகுதியில் உள்ளதால் வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளித்தாலே உடல் வெப்பமாவதைத் தடுக்கமுடியும். இதனால் உடல் இயக்கம் சார்ந்த அனேக நோய்கள் வராமல் தடுக்கலாம் ).
-          உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதால் ஆயுள் காலம் கூடும்.
-          தோலுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
-          தோலில் ஏற்படும் தொற்றுகள் நீங்கும்.
-          தோல் மென்மையாகும்.
-          தோல் சுருக்கம் ஏற்படாது, எனவே முதுமை தோற்றம் தள்ளிப்போகும்.
-          தோலின் செயல்திறன் அதிகரிக்கும்.
-          தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
-          கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும்
-          கண் பார்வை பாதுகாக்கப்படும்.
-          தலைமுடி நன்கு வளரும்.
-          உடல் வறட்சி மாறும்
-          தலைக்கு பலம் உண்டாகும்
-          முழங்கால் மூட்டுகள் பலமடையும்
-          குரல் வளம் பாதுகாக்கப்படும்
-          உடல் அசதி தீரும்
-          தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் உண்டாகும்.
-          நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
-          நரம்பு மண்டலம் பலப்படும்
-        குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும், எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கும் வரும் உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
என்ன எண்ணெயை பயன்படுத்த வேண்டும்?
எண்ணெய் என்ற வார்த்தை எப்படி வந்தது தெரியுமா?
Deepawalikku21. எண்ணெய் என்ற சொல்லின் பொருளே எள்+நெய் என்பதுதான். நெய்ப்புத்தன்மை உள்ள பொருளையே நெய் என்கிறோம். எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் நல்லெண்ணெய். திலம் என்ற வார்த்தைக்கு எள் என்று பொருள். எனவே திலத்திலிருந்து எடுப்பதால் தைலம் என்று பெயர் வந்தது. பொதுவாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு நல்லெண்ணெயே பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் எல்லா காலங்களுக்கும் ஏற்றது.
Deepawalikku5

2. பசு நெய்யையும் தேய்த்துக் குளிக்கலாம். (சித்த மருத்துவ அறிவியலை கூறுகிறேன். உண்பதற்கே நெய் வாங்க வழியில்லாதவர்கள் உள்ள நாட்டில் இதற்கு மனசாட்சி எப்படி இடம் தருமோ)
Deepawalikku8பசு நெய் தேய்த்து குளிப்பாட்டுவது குழந்தைகளுக்கு நல்லது. மேலும் இரத்த கொதிப்பு, மூளை சம்பத்தப்பட்ட நோய்கள், அதிக தாகம் போன்ற பிரச்சனைகள் உள்ள வயதானவர்களுக்கு நெய் தேய்த்து குளிப்பது நல்லது.
Deepawalikku12

3. வெப்பமான காலங்களில் பசு நெய் ஒரு பங்கு மட்டும் எடுத்து அந்த அளவுக்கு இன்னொரு பங்கு விளக்கெண்ணெயும் இன்னொரு பங்கு நல்லெண்ணையும் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து பயன்படுத்தலாம். பசுவின் நெய் தேய்த்து குளிக்கும்போது பச்சைப்பயறு பொடி தேய்த்துக் குளிக்கலாம்.

Deepawalikku4

எண்ணெயை நன்றாக உச்சி முதல் பாதம் வரை தேய்க்க வேண்டும். ஆனால் சூடு பறக்க தேய்க்கக் கூடாது.
தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிக்கவேண்டும்.
“ எண்ணெய்ப்பெறின் வெந்நீரிற்குளிப்போம்……” என்றதால் எண்ணெய் தேய்த்து குளித்தபின் வெந்நீரில்தான் குளிக்கவேண்டும்.
Deepawalikku6வெந்நீர் போடும்போது அதில் சில மாவிலைகளை போட்டு கொதிக்க வைத்து அந்த வெந்நீரை பயன்படுத்துவது நல்லது.
தேய்த்து குளிக்க அரைப்பு :
நெல்லிக்காய் பருப்பு – 1 ¼ பங்கு
வெண்மிளகு       – 1 பங்கு
கஸ்தூரி மஞ்சள்   – ¾ பங்கு
கடுக்காய் தோல்     – ½ பங்கு
வேப்பம் விதை       – ¼ பங்கு
இவைகளை பொடித்து தூளாக்கி தலைக்கு தேய்த்து குளிக்கலாம். (எல்லாவற்றையும் மருத்துவர் ஆலோசனை பெற்றே செய்யவும்). அல்லது சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று உங்கள் உடலுக்கு தகுந்த குளியல் பொடிகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
புண் உள்ளவர்கள், தோல் பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
அதே போல நரம்பு சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களும் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
எந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ?
Deepawalikku10

பதார்த்த குண சிந்தாமனி என்னும் புத்தகம் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டிய நேரத்தை இவ்வாறு விளக்குகிறது.
“அயமா னிவைக்கம் பதத்துளி யாழ்குளிர்க் கட்டமத்துள்
வயமா கனிக்குங்கோல் தேட்குநந் நான்குவின் மானிரண்டே
பயமார் கடமார்ச்சத் திற்குந் திரிக்குட் பகர்திங்களி
னயமாந்த தயிலங்க ளாடவ ரோகமெய் நண்ணுவரே”
அதாவது
- சித்திரை, வைகாசி மாதங்களில் (ஏப்ரல் பாதியிலிருந்து ஜூன் பாதி வரை) காலை சூரிய உதயத்திலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்.
- ஆனி, ஆடி மாதங்களில் (ஜூன் பாதியிலிருந்து ஆகஸ்ட் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து மூன்றேகால் மணி நேரத்திற்குள்.
- ஆவணி, புரட்டாசி, அய்ப்பசி, கார்த்திகை மாதங்களில் (ஆகஸ்ட் பாதியிலிருந்து டிசம்பர் பாதி வரை) சூரிய உதயத்திலிருந்து ஒன்றரை மணிக்குள்.
- மார்களி, தை மாதங்களில் ( டிசம்பர் பாதியிலிருந்து பிப்ரவரி பாதி வரை) ஒரு மணி நேரத்திற்குள்.
- மாசி, பங்குனி மாதங்களில் ( பிப்ரவரி பாதியிலிருந்து ஏப்ரல் பாதி வரை) ஒன்றேகால் மணி நேரத்திற்குள்.
எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும்.
யாரெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது
- சித்த மருத்துவத்தில் நோய்களை மூன்று பிரிவுகளாகப் பிரிப்போம்.
வாத நோய்கள்
பித்த நோய்கள்
கப நோய்கள்
இதில் கப நோயாளிகள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
-          செரியாமை (அஜீரணம்) உள்ளவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது.
மேலும் சில சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டவர்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக்கூடாது (தகுந்த சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்யலாம்)
எண்ணெய் தேய்த்து குளித்தபின் செய்யக்கூடாதவை
-          கடுமையான வேலைகள் செய்யக்கூடாது.
-          வெய்யிலில் சுற்றக்கூடாது.
-          உடலுறவு கூடாது.
-          பகலில் உறங்கக்கூடாது
-          அதிகம் காற்று வீசக்கூடிய இடத்தில் இருக்கக்கூடாது.
எண்ணெய் தேய்த்து குளித்தபின் இவைகளை செய்தால் உடல் நிலை பாதிக்கப்படும்.
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
-          கீரைத்தண்டு
-          அறு கீரை
-          மாவுப்பொருளால் ஆன உணவுப்பண்டங்கள்
-          வெல்லம்
-          பூசணிக்காய்
-          மாங்காய்
-          தேங்காய்
-          அகத்திக்கீரை
-          கசப்பான சுவையுள்ள பொருட்கள்
-          பழங்கள்
-          இளநீர்
-          சேம்பு, கத்தரிக்காய் , கொத்தவரை, மொச்சை,
-          நண்டு, மீன், கோழிக்கறி, ஆட்டுக்கறி , பன்றிக்கறி
-          எள், கொள்ளு, உளுந்து, கடலை
-          பால், தயிர், குளிர்ந்த பானங்கள்
-          வெங்காயம்
இவைகளை எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் தவிர்ப்பது நல்லது.
  
எண்ணெய் தேய்த்து குளித்தபின் என்னென்ன உணவுகளை உண்ணலாம்?
- எண்ணெய் தேய்த்து குளித்தபின் மீன், மட்டன், சிக்கன் சாப்பிடக்கூடாது என்று சொன்னதால் எண்ணெய் தேய்த்து குளிப்பதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டவர்களுக்கு முதலில் சொல்லிவிடுகிறேன்,
ஏரி மீன் சாப்பிடலாம், அயிரைமீன் , சுறா சாப்பிடலாம்.
- காடை, கவுதாரி, முயல் சாப்பிடலாம் (வழக்கொழிந்து போன இந்த உணவுகள் இப்போது மட்டன் சிக்கன் கடைகளில் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது)
- தயிர் , பால் சாப்பிடக்கூடாது ஆனால் நெய் சாப்பிடலாம்.
- கீரைகளில் பொன்னாங்கண்ணி, சிறுகீரை, முளைக்கீரை கறிவேப்பிலை சாப்பிடலாம்.
- மோர் சேர்ப்பதாக இருந்தால் ஒரு மண் சட்டியில் உப்பை போட்டு வறுத்து உப்பை எடுத்துவிட்டு அந்த சூடான சட்டியில் மோரை ஊற்றி முறித்து அந்த மோரை பயன்படுத்தலாம்.
- காய்கறிகளை பொருத்தவரை இளம் பிஞ்சானதாக சமைத்து உண்ணவேண்டும்.
என்னென்ன நோயினர் என்னென்ன தைலங்களை தேய்த்து குளிக்கவேண்டும்?
Deepawalikku9ஒவ்வொரு நோய் நிலையிலும் தேய்த்துக்குளிப்பதற்கென்று அனேக தைலங்கள் சித்த மருத்துவத்தில் உள்ளன. இதை கண்டிப்பாக சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்றே பயன்படுத்தவேண்டும். என்னென்ன நோய்களுக்கு, அதற்கான சிறப்பான தைலங்கள் உள்ளன என்பதை மட்டும் ஒரு சிறிய அறிமுகத்திற்காக சொல்கிறேன்.
-          சில கண் நோய்கள்
-          காது நோய்கள், மூக்கு நோய்கள், தொண்டை நோய்கள் (ENT)
-          பீனிச நோய்கள் (sinusitis)
-          இரத்தக்கொதிப்பு
-          சில தலை நோய்கள்
-          ஒற்றை தலைவலி
-          சில உடல் வலிகள்
-          சில வாத நோய்கள்
-          மூளை நோய்கள்
எண்ணெய் தேய்த்து குளிப்பதை ஒரு சடங்கு போல பண்டிகைக்கு மட்டும் செய்யாமல், அதை ஒரு ஆரோக்கிய முறையாக கடைபிடிக்கவேண்டும்.

CLINIC :
DR. JEROME XAVIER B.S.M.S., M.D
E.8 DOCTORS PLAZA
OPP TO SARAVANA STORES
VELACHERY
CHENNAI.
INDIA
MOBILE - 9444317293